தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மணிரத்னம் அடுத்து இயக்கப் போகும் படத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா, அவரது உறவினர் அல்லு அர்ஜுன் ஆகியோர் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. இவர்களுக்கு முன் மகேஷ் பாபு, நாகார்ஜுனா ஆகியோர்தான் நடிக்க உள்ளார்கள் என்றும் செய்திகள் வந்தன. ஆனால், மகேஷ்பாபுவும், நாகார்ஜுனாவும் நடிப்பதற்கு தயக்கம் காட்டியதாகவும், அதனால் மணிரத்னம் சிரஞ்சீவையைச் சந்தித்து அவரது மகனை நடிக்க கேட்டுக் கொண்டாதாகவும் தெலுங்குத் திரையுலகிலும் சொன்னார்கள்.
ஆனால், திடீரென மகேஷ் பாபு அவராகவே, மணிரத்னம் படத்தில் நான் கண்டிப்பாக நடிப்பேன் என்று அறிவித்திருக்கிறார். “மணிரத்தினம் இயக்கும் படத்தில் நடிப்பது இன்னும் அப்படியேதான் உள்ளது. சில படங்களில் நடித்து வருவதால் தேதிகளை ஒதுக்கித் தருவதில் மட்டும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் எப்படி தேதிகளை ஒதுக்கித் தருவது என பார்த்து வருகிறோம். இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் பட்சத்தில் இதில் இன்னும் ஒரு தெளிவு கிடைக்கும்,” என்று கூறியுள்ளார்.
அதேப்போல் நாகார்ஜுனா, ஐஸ்வர்யா ராய் படத்தில் நடிப்பதிலும் எந்த மாற்றமும் இல்லை என்றுதான் சொல்கிறார்கள். நாகார்ஜுனா தமிழில் டப் செய்யப்பட்ட 'உதயம், இதயத்தை திருடாதே' படங்களின் மூலம் 90களில் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்தான். 'ரட்சகன்' என்ற நேரடி தமிழ்ப் படத்திலும் நடித்திருக்கிறார். அதோடு, அவரது மனைவியான நடிகை அமலா மணிரத்னம் இயக்கிய 'அக்னி நட்சத்திரம்' படத்தில் நாயகியாக நடித்தவர். எப்படியும் மணிரத்னம் இயக்கத்தில் கணவர் நாகார்ஜுனாவை நடிக்க வைத்து விடுவார் என்கிறார்கள்.
நாகார்ஜுனாவின் மகன்களே நடிக்க வந்து விட்ட நிலையில் அவர் இன்னும் இளமையுடனும் ஹீரோவாகவே நடித்து வருவது தெலுங்குத் திரையுலகில் ஆச்சரியமாகப் பார்க்கப்படும் விஷயம். தமிழில், அதுவும் மணிரத்னம் படத்தில் நாகார்ஜுனா நடிக்க வருவது, இங்குள்ள சில நாற்பது வயதைக் கடந்த ஹீரோக்களுக்கு பொறமையை கிளப்பி விட்டிருக்கிறது என்கிறார்கள்.