‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் இயக்கிய துப்பாக்கியை, இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். அக்ஷய்குமார், சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று (ஜூன் 6) உலகம் முழுவதும் ரிலீசாகிறது. சென்னையில் மட்டும் 25 தியேட்டர்களில் ரிலீசாகிறது.
இந்தியாவில் வெளியாகும் இன்றைய தினமே பாகிஸ்தானிலும் வெளியாகிறது. இந்திப் படங்களை பாகிஸ்தான் மக்கள் விரும்பிப் பார்த்தாலும் இந்திய ராணுவத்தை பெருமைப்படுத்தும் படங்களை அவர்கள் பார்க்க வாய்ப்பில்லை. காரணம் பாகிஸ்தான் சென்சார் போர்ட் அனுமதிக்காது. ஹாலிடே படமும் இந்திய ராணுவத்தை சேர்ந்த தளபதிகள் இந்தியாவில் ஊடுருவி இருக்கும் சிலீப்பர் செல்லை அழிப்பது மாதிரியான கதை. அதிலும் வில்லன் முஸ்லிம் தீவிரவாதி. இதனால் படம் பாகிஸ்தானில் வெளிவருவது சந்தேகம் என்றே கூறப்பட்டது.
அக்ஷய் குமாருக்கு பாகிஸ்தானில் ரசிகர்கள் அதிகம். அவர்களும் படத்தை ஆர்வத்தோடு எதிர்பார்த்தாலும் வராது என்றே நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பாகிஸ்தான் சென்சார் போர்ட்டு தீவிரவாதி முஸ்லிம் தீவிரவாதி என்கிற பகுதியில் மட்டும் சில கட்டுகளை கொடுத்து வெளியிட அனுமதித்து விட்டது. அந்த வகையில் பாகிஸ்தானில் வெளியாகும் முதல் இந்திய ராணுவ படம் பெருமையை ஹாலிடே பெற்றுள்ளது.
"நரேந்திரமோடி பிரதரானதும் பாகிஸ்தானுடன் அவர் மேற்கொண்டிருக்கும் அன்பான அணுகுமுறை இரு நாட்டினரிடையேயும் நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் விதைத்துள்ளது. அதன் அறிகுறியே ஹாலிடே படத்தை பாகிஸ்தானில் வெளியிட அந்த நாடு அனுமதித்திருப்பது" என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.