அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
தமிழ் சினிமாவின் பாடல் வெளியீட்டு விழா மேடை அரசியல்வாதிகளின் பாராட்டு மேடைகளை விட ஜால்ரா சத்தங்களும், பாராட்டு மழைகளும் பொழிகிற மேடையாகி விட்டது. தேவைக்கு அதிகமாக புகழ்ந்து, ஜால்ரா போட்டு வாய்ப்பு கேட்கும் போக்கு வெட்ட வெளிச்சமாக நடந்து வருகிறது. மற்றவர்களை அசிங்கப்படுத்தி வாய்ப்பு கேட்கிற அளவிற்கு சினிமா மேடை மோசமாகிவிட்டது.
அதற்கு ஒரு உதாரணம் நேற்று ( ஜூன் 5) நடந்த விஜய் ஆண்டனி நடிக்கும் சலீம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா. விழாவுக்கு வந்திருந்தவர்கள் படத்தை விட்டுவிட்டு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த பாலாவையும், பாரதிராஜாவையும் புகழ்ந்து தள்ளினார்கள். அதுவாவது பரவாயில்லை. பாலாவை காக்கா பிடித்து அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்கும் தோணியில் நடிகர் ஷாம் பேசியதுதான் விரசத்தின் உச்சம்.
அவர் பேசியது அப்படியே....
"இன்னிக்கு விழா இருக்கிறதையே மறந்து ரொம்ப நேரம் தூங்கிட்டேன். எழுந்திருக்கவே முடியல. அப்படி ஒரு சூப்பரான கனவு வந்தது. எனக்கு அடிக்கடி கனவு வரும். ஒரு முறை கனவில் ஐஸ்வர்யாராய் வந்தார். அவர் அபிஷேக் பச்சனை விட்டுவிட்டு என்னுடன் வந்துவிட்டமாதிரி அந்த கனவு இருந்தது. இன்னொரு நாள் கனவில் நயன்தாரா என்னை காதலித்தார், இடையில் சிம்பு வந்து கெடுத்து விட்டான். இன்று வந்த கனவுதான் ரொம்ப முக்கிமானது. டைரக்டர் பாலா என்னை வைத்துதான் படம் எடுக்க வேண்டும் என பிடிவாதம் பிடித்துக் கொண்டிருப்பதாக அந்த கனவு வந்தது. அதனால் எழுந்திருக்க மனம் இல்லாமல் அந்த கனவு தொடர வேண்டுமே என்று நினைத்தேன். ஐஸ்வர்யராயும், நயன்தாராவும் வந்த கனவு கூட என்னை ஈர்க்கவில்லை. இந்த கனவு என்னை ஈர்த்தது. கனவு கண்ட அன்றே பாலாவையும் சந்தித்திருக்கிறேன். விழா முடிந்ததும் மீண்டும் வீட்டில் போய் தூங்கி அந்த கனவை காண வேண்டும்.
இதுதான் ஷாம் பேசிய பேச்சு. "ஷாம் என்ன கனவு வேண்டுமானாலும் கண்டு கொள்ளட்டும். அல்லது கனவு கண்டதாக கற்பனையாக சொல்லி பாலாவை கூல் பண்ணட்டும். ஆனால் அவர் கனவில் ஐஸ்வர்யாராயை ஏன் இழுத்து அசிங்கப்படுத்த வேண்டும்" என்பதே அங்கு வந்திருந்தவர்களின் கேள்வி.
"ஐஸ்வர்யராய் ஒரு நடிகை, இந்த நாட்டின் மதிப்பு மிக்க குடிமகன் அமிதாப் பச்சனின் மருமகள், இந்தியின் மிகப்பெரிய நட்சத்திரத்தின் மனைவி. ஒரு குழந்தைக்கு தாய். வெளிநாடுகளில் இந்திய பெண்களின் அடையாளம். அவர் தன் கணவனை விட்டுவிட்டு என்னுடன் வந்தார் என்று எப்படி ஷாமால் நா கூசாமல் பேச முடிந்தது.
இன்னொரு மேடையில் இங்குள்ள முன்னணி நட்சத்திரத்தின் மனைவி என் கனவில் அவரை விட்டுவிட்டு என்னிடம் வந்தார் என்று ஷாமால் கூற முடியுமா? அவரது மனைவி பற்றி மற்றவர் இப்படி பேசினால் தாங்கிக் கொள்ளவாரா. நடிகர்கள் முதலில் மேடை நாகரீகத்தை கற்றுக் கொள்ள வேண்டும். சக நடிகர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்" என்று தன் ஆதங்கத்தை புலம்பித் தீர்த்தார் விழாவுக்கு வந்திருந்த முன்னணி இயக்குனர் ஒருவர்.