இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. தொடர்ந்து அஜீத், ஆர்யா, மாதவன், ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தமிழில் ஒரு ரவுண்டே வந்தார். ஆனால் சமீபகாலமாக தமிழில் அவர் நடிக்கவில்லையென்றாலும், மலையாளம் மற்றும் கன்னட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை பாவனாவுக்கு இன்று(ஜூன் 6ம் தேதி) பிறந்தநாள். தனது 27வது பிறந்தநாளை ஆஸ்திரேலியாவில் கொண்டாடியுள்ளார். மலையாளம் திரையுலகம் சார்பில் ஆஸ்திரேலியாவில் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியா சென்ற பாவனா அங்கு தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.
தமிழில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்ததாகவும், ஆனால் அதற்கான கதை சூழல் சரியாக இல்லை என்றும், நல்ல கதைகள் அமையும் பட்சத்தில், தமிழிலும் நடிப்பேன் என்று கூறியுள்ளார் நடிகை பாவனா.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாவனா...!