ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மலையாளத்தில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், கவிஞராகவும் இருந்து வருபவர் ஸ்ரீகுமரன் தம்பி. ஏறக்குறைய 21 வருடங்கள் கழித்து மீண்டும் படம் இயக்க வந்திருக்கிறார். 1966ல் திரையுலகிற்கு அறிமுகமான இவர், 22 படங்களைத் தயாரித்துள்ளார். 29 படங்களை இயக்கியுள்ளார். 3000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மலையாளத் திரையுலகின் 'இருதய ராகங்களூடே கவி' என புகழப்பட்டுள்ளார். இவரது காதல் பாடல்கள் மலையாளத் திரையுலகில் மிகவும் பிரபரமானவை.
அப்படிப்பட்டவர் திரையுலகை விட்டு இத்தனை ஆண்டு காலமாக விலகியிருந்ததற்குக் காரணம் மம்முட்டியும், மோகன்லாலும்தான் என குற்றம் சாட்டுகிறார். இந்த இரண்டு ஸ்டார்களும் மலையாளத் திரையுலகை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால்தான் சினிமாவி விட்டு விலகி சின்னத்திரை பக்கம் சென்றேன் என்று சொல்லியிருக்கிறார்.
ஸ்ரீகுமரன் தம்பி ஒரு சுதந்திரமான படைப்பாளி. அவருக்கு எது சரி என்று படுகிறதோ அதை மட்டுமே செய்வார். நடிகர்களோ மற்றவர்களோ சொல்வதை கேட்கவே மாட்டார் என்பது திரையுலகில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால், மம்முட்டியும், மோகன்லாலும் இயக்குனர்களின் படைப்புகளில் தலையிடுவதை ஸ்ரீகுமரன் கண்டிக்கிறார். மம்முட்டி, மோகன்லால் இருவரது திரையுலகப் பயணமும் முடிவுக்கு வரும் காலம் வந்து விட்டது. எனவேதான், மீண்டும் படத்தை இயக்கு வந்துள்ளேன் என வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் ஸ்ரீகுமரன்.
அவர் இயக்க உள்ள புதிய படத்தில் சீனியர் நடிகரான மது, சாரதா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.