ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்குத் தாயான பிறகு ஐஸ்வர்யாராய் படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். குழந்தை ஓரளவு வளர்ந்துவிட்டதால் தற்போது மீண்டும் நடிக்கும் முயற்சியில் உடம்பைக் குறைத்து வரும் ஐஸ்வர்யாராய், இரண்டு படங்களில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அவற்றில் ஒன்று மணிரத்னம் இயக்கும் படம். இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன் பி.வாசு இயக்கத்தில் ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்கைகளும் என்ற படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பதாக பி.வாசு தரப்பில் மீடியாக்களுக்கு செய்தி கொடுக்கப்பட்டது.
அந்த செய்தி வெளியான அடுத்த நாளே பி.வாசு இயக்கத்தில் தான் நடிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் ஐஸ்வர்யாராய். இந்நிலையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் என்ற பிரபலமான நகைக்கடை விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யாராய். இந்த விளம்பரப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். விரைவில் நடைபெறவிருக்கும் இந்த விளம்பரப்படத்தின் ஷூட்டுக்காக சென்னைக்கு வருகிறாராம் ஐஸ்வர்யாராய்.