‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
''உள்ளம் கேட்குமே'' படத்தில் அறிமுகமானவர் பூஜா. அதன் பிறகு தம்பி, ஆட்டோ, உள்பட பல படங்களில் நடித்தார். நான் கடவுள் படத்தில் இதுவரை எந்த நடிகையும் நடிக்காத கேரக்டரில் துணிச்சலாக நடித்தார். தேசிய விருதுகூட அவருக்கு எதிர்பார்க்கப்பட்டது. பூஜா குறைவான படங்களில் நடித்தாலும் அவரைப் பற்றி வதந்திகள் குறைவில்லாமல் வந்து கொண்டே இருக்கும்.
காரணம் திடீரென்று வருவார் ஒரு சில படத்தில் நடிப்பார் பிறகு காணாமல் போய்விடுவார். யாரும் தொடர்பு கொள்ள முடியாது. எங்கிருக்கிறார் என்பதும் தெரியாது. திடீரென்று இலங்கையில் சிங்களப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பார். திடீரென்று பெங்களூரில் சாப்ட்வேர் கம்பெனியில் மாதச் சம்பளத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருப்பார். திடீரென்று சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளோடு இருப்பார்.
சிங்களர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு இலங்கையில் செட்டிலாகிவிட்டதாக ஒரு செய்தி, பெங்களூர் ஐ.டி நிறுவன அதிகாரியை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் என்று ஒரு செய்தி. இதுபற்றி விளக்கம் கேட்க தொடர்பு கொண்டால் கிடைக்கவே மாட்டார். இப்படி ஒரு புரியாத புதிராகவே இருப்பார் பூஜா.
சமீபத்தில் அவர் நடித்த விடியும்முன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அவர் பாலியல் தொழிலாளியாக நடித்தது பாராட்டும்படி இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்த்தால் பிறகும் அவரைக் காணவில்லை. இப்போது திடீரென்று ஒரு இளைஞருடன் அவர் மணக்கோலத்தில் இருக்கும் படங்கள் வெளிவர அவருக்கு திருமணமாகி விட்டது என்ற செய்தி ரெக்கை கட்டிப் பறந்தது.
இதனை மறுத்த பூஜா "பேசாமல் எனக்கு 60ம் கல்யாணமும் பண்ணி வைத்து விடுங்கள்" என்று மீடியாக்கள் மீது கோபத்தை கொட்டியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: அந்தப் படத்தில் இருப்பது என்னோட திக் பிரண்ட் ராஜ். அவன், கடவுள் பாதி மிருகம் பாதி படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறான். என்னுடன் நடிக்க முடியுமா என்று கேட்டான். நடித்தேன். அந்த படத்தோட ஸ்டில் அது. மீடியாக்கள்லாம் சேர்ந்து எனக்கு எத்தனை கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு தெரியல. பேசாம 60ம் கல்யாணமும் பண்ணி வச்சிடுங்க ப்ளீஸ்.
நான் சுதந்திரமான பொண்ணு. என் மனசுக்கு பட்டதை துணிச்சலுடன் செய்யிற பொண்ணு. மீடியாகிட்ட சொல்ல வேண்டிய விஷயத்தை கண்டிப்பா தைரியமா சொல்லுவேன். சொல்லத் தேவையில்லாத பர்ஷனல் விஷங்களையும் சொல்லணும்னு எதிர்பார்க்கிறது என்ன நியாயம். என்று கேட்கிறார் பூஜா.