ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முன்னாள் கதாநாயகியும், இந்நாள் முன்னணி கதாநாயகியுமான கரீனா கபூரின் அக்காவான கரிஷ்மா கபூரின் விவாகரத்து முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கபூர் குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் ரந்தீர் கபூரின் மகளான கரிஷ்மா கபூர் தனது 17வது வயதிலேயே நடிக்க வந்தார். “ஜிகார், அனாரி, ராஜா பாபு, கூலி நம்பர் 1, ராஜா ஹிந்துஸ்தானி,” போன்ற பல படங்களில் நடித்தார். ஹீரோயினாக உச்சத்தில் இருக்கும் போதே, 2003ம் ஆண்டு தொழிலதிபரான சஞ்சய் கபூர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின் ஒரு பெண், ஒரு ஆண் என இரு குழந்தைகளுக்குத் தாயானார்.
திருமணமான சில வருடங்களுக்குள்ளேயே இருவருக்குள்ளும் பிரச்னை ஏற்பட்டது. அதன் பின் சமாதானம் அடைந்தனர். ஆனாலும், கரிஷ்மா விவாகரத்து செய்யப் போவதாகவே அடிக்கடி செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. கரிஷ்மாவின் மைத்துனரான சைப் அலி கான் இந்த விவகாரத்தில் தலையிட்டு, கரிஷ்மாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் ஏற்படாமல் சுமூகமாக விவகாரத்துப் பெற முயற்சித்து வருகிறார்.
மும்பை, பாந்தராவில் உள்ள நீதிமன்றத்துக்கு சில நாட்களுக்கு முன் சைப் அலிகானுடன் கரிஷ்மா சென்றுள்ளார். கணவன் - மனைவி இருவரும் எந்த வித வாக்குவாதங்களிலும் ஈடுபடாமல் பரஸ்பரம் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாகத் தெரிகிறது. கரிஷ்மாவின் கணவரான சஞ்சய் கபூர், அவரது முதல் மனைவியுடன் அடிக்கடி சுற்றி வந்ததே, கரிஷ்மா அவரைப் பிரிவதற்கான காரணமாக சொல்லப்படுகிறது.
கரிஷ்மா மீண்டும் திரைப்படங்களிலும், டிவிக்களிலும் நடிக்க முடிவு செய்துள்ளாராம். நட்சத்திரங்களின் விவாகரத்து என்பது தொடர்கதையாக இருந்து வரும் விஷயமாகி விட்டது.