ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தி சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் சக்தி கபூர். இப்போதும் சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரை அடுத்த சங்கானர் என்ற விமான நிலையத்துக்கு சென்றிருந்த இவர், விமான நிலையத்தில் பொதுமக்கள் கூடும் இடத்தில் புகைப்பிடித்தாராம்.
அதை அங்கிருந்து யாருமே கண்டிக்காதபோதும், அதைப்பார்த்த யாரோ ஒரு புகைப்படக்காரர், அதை தனது கேமராவில் க்ளிக் செய்து விட மறுநாள், பத்திரிகைகளில் அந்த போட்டோ பிரசுரமாகி விட்டதாம். அதையடுத்து, பொது இடத்தில் புகைப்பிடிக்கக்கூடாது என்ற தடை இருப்பது தெரிந்தும் சக்தி கபூர் புகை பிடித்தது கண்டிக்கத்தக்கது. அதனால் அவருக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி வருகிற 6-ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்திருக்கிறாராம். இந்த வழக்கில், நடிகர் சக்தி கபூரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.