இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
பெரும்பாலும் இரண்டு நடிகைகள் ஒரே படத்தில் நடித்தாலே அக்கப்போர்தான். அதேபோல் ஒரு நடிகை இன்னொரு நடிகைக்கு சிபாரிசு செய்வதும் சினிமாவில் நடந்ததாக வரலாறில்லை. ஆனால், சமந்தாவோ, தனது நெருங்கிய தோழியான ப்ரணிதாவுக்கு தான் நடிக்கும் தெலுங்கு படங்களில் சிபாரிசு செய்து வருகிறார். அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் உயிர்த்தோழிகளாகி விட்டார்களாம்.
இதுபற்றி ப்ரணிதா விடுத்துள்ள செய்தியில், தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்று நினைத்து எனக்கு சகுனி படம் தோல்வியடைந்ததால் பிறகு எந்த படமும் கமிட்டாகவில்லை. அதனால் வாயப்பே இல்லாமல் கன்னடத்தில் காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன.
அந்த நேரம்தான் சமந்தாவின் நட்பு எனக்கு கிடைத்தது. சில மாதங்களிலேயே இருவரும் மனம் விட்டு பேசும் அளவுக்கு நெருக்கமான தோழிகளாகி விட்டோம். அதையடுத்து, தான் நடித்த அத்திரிண்டிக்கி தாரிடி என்ற தெலுங்கு படத்தில் நடிக்க சிபாரிசு செய்த சமந்தா. பின்னர், ரபசா என்ற படத்தில் நடிக்க சிபாரிசு செய்தவர், இப்போது அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக தான் நடிக்கும் படத்திலும் ஒரு வேடத்தில் நடிக்க சிபாரிசு செய்திருக்கிறார். அந்த வகையில் நான் நடித்த மூன்று படங்களில் இரண்டாவது நாயகி வேடத்தில் என்னை நடிக்க வைத்திருக்கிறார் சமந்தா.
ஆக, சமந்தா புண்ணியத்தில் தெலுங்கில் மூன்றாவது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன் என்று செல்லும் ப்ரணிதா, இனி தெலுங்கு மட்டுமின்றி, தமிழிலும் இரண்டாவது நாயகி வேடம் கிடைத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். இந்த தகவலையும் சமந்தா மூலமே கோலிவுட்டுக்கு தெரியப்படுத்தி வருகிறேன் என்கிறார்.