'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
துப்பாக்கியைத் தொடர்ந்து தற்போது விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். கடந்த சில வாரங்களாக இப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இதற்கிடையில், துப்பாக்கி படத்தை அக்ஷய் குமாரை வைத்து, ஹாலிடே என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்து வந்தார். தமிழ் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளுக்கும் தனித்தனியே உதவியாளர்களை வைத்திருப்பதால் கத்தி மற்றும் ஹாலிடே படங்களின் வேலைகளை ஒரே நேரத்தில் கவனித்து வந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.
ஹாலிடே படம் வருகிற 6-ஆம் தேதி வெளியாகவிருப்பதால் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஏ.ஆர்.முருகதாஸ் மும்பை சென்றுள்ளார். இதனால் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள புஷ்பா கார்டனில் போடப்பட்ட ஹாஸ்டல் செட்டில் நடந்து வந்த கத்தி படத்தின் ஷூட்டிங்குக்கு பிரேக் கொடுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்!
பத்து நாட்களுக்குப் பிறகே மீண்டும் கத்தி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்பதால், இந்த இடைவெளியில் அடுத்து நடிக்க உள்ள படத்திற்கான போட்டோ செஷன் பண்ணிவிடலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறாராம் விஜய்.