இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஆந்திராவில் பிறந்த பெங்காலி வம்சத்தை சேர்ந்த சுஷ்மிதா சென், 1994ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு பெற்றார். அதன் பிறகு இந்திப் படங்களில் பிசியானார். தமிழ் சினிமாவுக்கும் சுஷ்மிதாவுக்கும் பெரிய தொடர்பு இல்லை. ரட்சகன் படத்தில் ஹீரோயினாக நடித்தார். பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு பெரும் தோல்வியை சந்தித்த படம் அது. அதன் பிறகு அவர் தமிழில் நடிக்கவில்லை. பல வருடங்களுக்கு பிறகு முதல்வன் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார்.
2010ம் ஆண்டு அவர் நடித்த இந்திப் படம் நோ பிராப்ளம்தான் கடைசி படம். அதன் பிறகு சினிமாவை விட்டு முழுமையாக விலகினார். 4 வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். பிரபல வங்காள இயக்குனர் சர்ஜித் முகர்ஜி இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். ஹீரோக்களுக்கு அக்கா, அண்ணி, வில்லி வேடம் என்றாலும் ஓகே என்று சொல்லியிருக்கிறாராம் சுஷ்மிதா சென்.