பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபல இயக்குனர் சுப்ரஜித், 1971ம் ஆண்டு நடந்த வங்காள விடுதலை போர் பற்றி ஒரு டாக்குமென்டரி படத்தை இயக்கி உள்ளார். 30 நிமிடம் ஓடும் இந்த டாக்குமென்டரி படம் போரில் உயிர்நீத்த 7 எல்லை பாதுகாப்பு படை வீரர்களை பற்றியது. இதனை உள்ளாட்சித்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் எல்லை பாதுகாப்பு படை தயாரித்துள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் சுப்ரஜித் கூறும்போது "எங்கள் கோரிக்கையை ஏற்று இரண்டே நாளில் இசை அமைத்துக் கொடுத்தார் ரஹ்மான். இதில் போரில் சாகசங்கள் புரிந்த உயிர்நீத்த நிஜ ஹீரோக்களை பற்றிய ஒரு பாடலுக்கும் அவர் இசை அமைத்துக் கொடுத்துள்ளார். இது அவரது வந்தேமாதரம், ஜெய்கோ வரிசையில் இடம் பிடிக்கும்" என்றார்.