ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
கோச்சடையான் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் கேளிக்கை வரி வசூலித்தது பற்றிய விவகாரம் கோர்ட்டில் இருக்கிறது. எர்ணாவூரைச் சேர்ந்த முத்தையா என்ற வழக்கறிஞர் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். "தமிழ் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு 2011ம் ஆண்டு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தடை அமுலில் இருக்கும்போதே வணிகவரித்துறை கடந்த மே மாதம் 12ந் தேதி அன்று கோச்சடையான் படத்துக்கு வரிவிலக்கு சலுகை வழங்கி உள்ளது. இது கோர்ட்டை அவமதிக்கும் செயல்" என்று அவர் தனது மனுவில் தெரிவித்திருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 'கோச்சடையான்' படத்துக்கு வரிவிலக்கு அளித்தது சரிதான். எனவே கோச்சடையான் படம் பார்க்க வரும் பொதுமக்களிடம் கேளிக்கை வரியை வசூலிக்க கூடாது" என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை ஒரு சில தியேட்டர்கள் தவிர பெரும்பான்மையான தியேட்டர்கள் பின்பற்றவில்லை என்று மனுதாரரின் வழக்கறிஞர் ரவீந்திரன் என்பவர் கோர்ட்டில் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் இதுபற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டனர். வழக்கு இன்றும் (ஜுன் 4) விசாரணைக்கு வருகிறது.