‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பாஸ்கரன் நடித்த தலைவன், கெளதம் நடித்த என்னோ ஏதோ ஆகிய படங்களில் நடித்தவர் நிகிஷா பட்டேல். கன்னட நடிகையான இவர் அதையடுத்து நகுலுக்கு ஜோடியாக நாரதர் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இளசுகளை கவரும் காதல் கதையில் உருவாகும் இந்த படத்தில் ஆரம்பத்தில் இருந்தே பிரச்னை மேல் பிரச்னை செய்து வருகிறார் நிகிஷா.
முதலில் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று எக்குதப்பாக டைரக்டரிடம் பேசி சண்டை போட்டவர், இப்போது ரொமான்ஸ் காட்சிகளில்கூட நகுலுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேன் என்கிறாராம். காதல்வயப்பட்டு கட்டிப்பிடித்துக்கொள்ளும் காட்சியில்கூட உப்புசப்பில்லாமலேயே நடிக்கிறாராம் நிகிஷா. இதனால் காட்சி தத்ரூபமாக வராமல் தவித்துக்கொண்டிருக்கிறாராம் இயக்குனர்.
அதோடு, அவரது கோ ஆர்ட்டிஸ்டான நகுலோ, நிகிஷா இப்படி ஈடுபாடு இல்லாமல் நடிப்பதால் அடிக்கடி டென்சனாகி கத்துகிறாராம். இதனால் பதிலுக்கு நிகிஷாவும் கத்துகிறாராம். விட்டால் இரண்டு பேருமே அடிதடி என்று மல்லுக்கட்டிக்கொள்ளும் அளவுக்கு விசயம் போய்க்கொண்டிருக்கிறதாம். ஆனபோதும், அசரவில்லையாம் நிகிஷா. எனக்குத் தெரிந்த நடிப்பு இதுதான் என்று மேலோட்டமாக நடித்துக்கொண்டிருக்கிறாராம்.
இப்படி பர்பாமென்சில்தான் தகராறு என்றால், தினமும் ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு என்றால் 11 மணிக்குதான் ஆஜராகிறாராம் நடிகை. அதுவரைக்கும் டோட்டல் யூனிட்டே அவருக்காக காத்துக்கொண்டிருக்கிறார்களாம். ஆக, இரண்டு தோல்வி படங்களில் நடித்துள்ள நிகிஷா, பெங்களூரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்து, இந்த அளவுக்கு அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கிறார்.