தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தித் திரையுலகின் பிரபலமான நடிகரான அமிதாப் ஏற்கெனவே 'கோன் பனேகா குரோர்பதி' என்ற டிவி நிகழ்ச்சியை அற்புதமாக நடத்தி தொலைக்காட்சியிலும் சாதனை படைத்தார். தற்போது, ஒரு தொடரில் நடிக்க வந்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். இப்போதும் அவர் சில இந்திப் படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் சூழ்நிலையில் தொடரில் நடிக்க வந்துள்ளது இந்தித் திரையுலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமிதாப்புக்கு வெகுநாட்களாகவே தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததாம். இத் தொடரின் கதையைக் கேட்டதுமே அமிதாப் நடிக்க சம்மதித்தாராம். 'யுத்' என்பது அவருடைய கதாபாத்திரத்தின் பெயரான 'யுதிஷ்டிரர்' என்பதின் சுருக்கமாம். வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திக்கக் கூடிய ஒரு சவாலான கதாபாத்திரம் என்பதால் 'யுத்' என்பது தொடருக்கு பொருத்தமாகவே அமைந்து விட்டது என்கிறார்கள்.
தொலைக்காட்சித் தொடரில் நடிப்பதைப் பற்றி அமிதாப் கூறியதாவது, “ஒரு தொலைக்காட்சித் தொடர்ல நடிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை இருந்தது. இதுவரைக்கும் நான் முயற்சி செய்யாத ஒரு விஷயமா இருந்ததால சம்மதிச்சேன். இந்த தொடர் எல்லாரையும் ரசிக்க வைக்கும்னு நம்பறோம். உலகத்துலயே இந்தியாவுல டிவியோட வளர்ச்சி ரொம்ப அதிகமா இருக்கு. ஏறக்குறைய 800 தொலைக்காட்சிகள் இந்தியாவுல இருக்கு. உலக அளவுல ஒப்பிடும் போது இது அதிகம்தான். சினிமாவை டிவி பாதிச்சாலும் இந்த வளர்ச்சியை ஏத்துக்கிட்டுதான் ஆகணும். டிவி, சினிமா எல்லாத்துக்கும் நடிப்பு ஒண்ணுதான். எதுல நடிக்கிறோம்கறது முக்கியமில்லை. இந்த தொடரோட வெற்றியையும், என்னோட வெற்றியையும் நேயர்கள்தான் தீர்மானிக்கணும்.