அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கேரள மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த், கடந்த ஐபிஎல் தொடரின் போது, 'பெட்டிங்' ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள பிசிசிஐ நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டார். கிரிக்கெட்டை விட நடனத்திலும், மற்ற என்டர்டெயின்மென்டான விஷயங்களிலும் தான் அவர் அதிகமாக கவனிக்கப்பட்டார். அது தொடர்பாக பல விமர்சனங்களும் எழுந்தன. இருந்தாலும் இப்போது அவற்றிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்து விட்டார்.
பிரபல இந்தித் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்று வரும் நடனப் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வருகிறார். அதைப் பற்றி ஸ்ரீசாந்த் சொன்னதாவது,
“எதுவும் நம்மைத் தடுத்து விட முடியாது. கிரிக்கெட் விளையாட்டை நான் இழந்துள்ளேன். வழக்கு முடியும் வரை பயிற்சியும் எடுக்க முடியாது. டிவி நிகழ்ச்சியில் ஆட வாய்ப்பு கிடைத்த போது, என்னை விட எனது குடும்பத்தாரும், நண்பர்களும்தான் என்னை சம்மதிக்க வைத்தனர். எனது மனைவி கூட உங்களுக்குத்தான் நடனம் என்றால் ரொம்ப பிடிக்குமே, ஏன் உங்களது திறமையை வெளிப்படுத்தக் கூடாது என்றார்கள். எனக்கு பிரேக் டான்ஸும் ஆடத் தெரும், தெரு டான்ஸும் ஆடத் தெரியும். ஆனால், டிவி மேடையில் ஆடுவது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. பல விதமான நடனங்களை இதில் ஆட வேண்டியுள்ளது. ஆனாலும், எனக்கு சிறந்த பயிற்சியாளர் கிடைத்துள்ளார்,” என்றார்.
தற்போது ஸ்ரீசாந்த் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள 'அன்புள்ள அழகே' என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். அதோடு ஒரு சில பாடல்களையும் எழுதுகிறாராம். இனி, சினிமாவிலும் ஸ்ரீசாந்தின் ஆட்டத்தைப் பார்க்கலாம்.