ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
நாயகன், அக்னிநட்சத்திரம், ரோஜா உட்பட எத்தனையோ வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் மணிரத்னம். சில வருடங்களுக்கு முன்புவரை தமிழ்சினிமா இயக்குநர்களில் ட்ரண்ட்செட்டராகவே திகழ்ந்தார். மணிரத்னத்தின் படங்களைப் பார்த்து அவரது பாதிப்பில் இயக்குநர்களானவர் பலர்.
மணிரத்னத்தின் பாதிப்பு இல்லாத இளம் இயக்குநர்களே இல்லை என்கிற அளவுக்கு புதிய தலைமுறையினரிடம் மணிரத்னம் மிகப்பெரிய ஆளுமையாக விளங்கினார். இத்தனை பெருமைக்குரிய மணிரத்னத்தை திரையுலகம் மறந்துவிட்டதுதான் வேதனையான விஷயம். ஜூன் 2 ஆம் தேதி, அதாவது நேற்று இளையராஜாவுக்கு மட்டுமல்ல மணிரத்னத்துக்கும் பிறந்த நாள். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் இளையராஜாவின் பிறந்தநாள் அமர்க்களப்பட்டது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழையைப் பொழிந்தனர். பண்பலை வானொலிகளில் இளையராஜாவின் இசை மட்டுமே ஒலிபரப்பபட்டது. தவிர பஞ்சுஅருணாச்சலம், பாலா, பார்த்திபன், எஸ்.ராமகிருஷ்ணன், சுகா போன்ற பிரபலங்களுடன் இளையராஜாவும் பங்கேற்க ராஜாவின் பிறந்தநாள் நேற்று கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது.
அய்யோ பாவம்...மணிரத்னத்தின் பிறந்தநாள் பற்றி சத்தமே இல்லை. திரையுலகப் பிரபலங்களால் நிரம்பி வழியும் ட்விட்டரில் கூட மணிரத்னத்தை அவ்வளவாக யாரும் வாழ்த்தியதாகத் தெரியவில்லை. யுடிவி தனஞ்செயன் போன்ற வெகுசிலர் மட்டுமே மணிரத்னத்தை வாழ்த்தினர். இதைப் பற்றி எல்லாம் மணிரத்னம் கவலைப்படுகிறவர் இல்லை என்றாலும், வெற்றியடைந்தவனின் பின்னால் ஓடும் திரையுலகினரின் போக்கு ரசிக்கும்படி இல்லை. தோல்விப்படங்கள் கொடுத்ததினாலே மணிரத்னம் திறமையற்றவர் என்று அர்த்தமா?