ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னையில் நேற்று இளையராஜாவின் 71வது பிறந்த நாள் விழா படு விமரிசையாக நடைபெற்றது. அப்போது தான் எழுதிய ஒரு புத்தகத்தை வெளியிட்ட இளையராஜா, 71 மரக்கன்றுகளையும் நட்டார். அந்த விழாவில் பஞ்சு அருணாசலம், பார்த்திபன், பாலா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது இளையராஜா பற்றி டைரக்டர் பாலா பேசுகையில், குமுதம் இதழில் இளையராஜா எழுதிய கேள்வி பதிலை அது வெளியானபோதே படித்தேன். இருந்தாலும், நேற்று இரவு மீண்டும் அதை வாசித்தேன். அப்போது அவர் சொல்லியிருந்த இரண்டு விசயங்கள் என்னை வெகுவாக பாதித்தன. ஒன்று, நான் எழுதியுள்ள இந்த கேள்வி பதிலால் யாருடைய மனதும் புண்பட்டிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தார். அதில் அவரது பெருந்தன்மை வெளிப்பட்டிருந்தது.
அதேபோல், நட்பு பெரிதா? உறவு பெரிதா? என்று அவரிடம் கேட்ட கேள்விக்கு, நட்பு, உறவு ரெண்டுமே ஒன்னுதானய்யா என்று பதில் அளித்திருந்தார். அதில் அவரது பக்குவத்தையும், பரந்த மனப்பான்மையையும் வெளிப்பட்டிருந்தது. இந்த மாதிரியெல்லாம் அவரை தவிர வேறு யாராலும் சொல்ல முடியாது. அதற்காக அவரது பாதங்களைத் தொட்டு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.