தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும், ''கத்தி'' படத்தில் தற்போது இரண்டு வேடங்களில் விறுவிறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். ஒரு வேடம் என்றாலே அவரை பரபரப்பு தொற்றிக்கொள்ளும், ஆனால் இந்த படத்தில் ஹீரோவும் அவரே, வில்லனும் அவரே என்பதால் ஏகப்பட்ட பிசியில் விஜய் வட்டாரம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், அடுத்தபடியாக சிம்புதேவன் இயக்கத்தில் அவர் நடிக்கும் பட வேலைகளும் இன்னொரு பக்கம் சென்று கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே என்றெல்லாம் பேச்சுவார்த்தை நடத்தினார் சிம்புதேவன். ஆனால், அவர்கள் கேட்ட சம்பளம் தலைசுற்ற வைத்து விட்டது. அதனால், இப்போது ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோரிடம் பேசியிருக்கிறார்கள். அதேப்போல், முதலில் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க வைக்கும் முடிவில்தான் இருந்தார்கள். ஆனால், வசந்தபாலன் இயக்கும் காவியத்தலைவன் படத்துக்கு பல மாதங்களாக பாடல்களை கொடுக்காமல் அவர் இழுத்தடிப்பதைப்பார்த்தவர்கள, இப்போது தேவிஸ்ரீ பிரசாத்தை ஒப்பந்தம் செய்து விட்டனர்.
தமிழில், சிங்கம், சிங்கம்-2, மன்மதன் அம்பு உள்பட பல படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த அவர், விஜய் நடித்த சச்சின் படத்துக்கும் இசையமைத்திருந்தார். ஆக, இப்போது இரண்டாவதாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் தேவிஸ்ரீ பிரசாத்.