வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிரகாஷ்ராஜையும், பிரச்சனைகளையும் பிரிக்கவே முடியாது என்பது போல், அவர் அடிபடும் செய்திகளில் பிரச்சனைகளைச் சார்ந்தே இடம் பிடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கு இயக்குனர்களுடன் பிரச்சனை, சக விமானப் பயணியுடன் சண்டை என செய்திகளில் அதிகமாகவே இடம் பிடித்துவிட்டார். அவர் இயக்கி விரைவில் வெளிவரும் படமான 'உன் சமையல் அறையில்' படத்தின் செய்திகளை விட, அவரைப் பற்றிய செய்திகளே அதிகம் வெளிவந்தன.
இது குறித்து பிரகாஷ்ராஜ் கூறியதாவது, “நான் எப்போதுமே நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். இதுவரை 300 படங்களுக்கும் மேல் பல மொழிகளில் நடித்துள்ளேன். ஆனால் ஒரு 10 பேரிடம் மட்டும்தான் எனக்குப் பிரச்சனை. மீதி 290 பேர் என்னுடைய வேலையை மிகவும் ரசிக்கிறார்கள். நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். நம்மால் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது,” என்கிறார்.
அவர் இயக்கியுள்ள 'உன் சமையல் அறையில்' படத்தைப் பற்றிக் கூறுகையில், “இந்த படம் நிச்சயம் அனைத்து ரசிகர்களையும் கவரும். என்னுடைய படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பதே எனக்குப் பெருமைதான். இப்படத்தின் திரைக்கதையும், எதிர்பாராத சில திருப்பங்களும் படத்தை வெகுவாக ரசிக்க வைக்கும். நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன். எதைப் பற்றியும் எனக்குள் ஒரு ஐடியா இருக்கும். நடிகனாக மிகவும் பிஸியாக இருந்தாலும், இயக்கம் பற்றி எப்போதும் என் மனதுக்குள் ஒரு எண்ணம் இருக்கும்,” என்கிறார்.
'உன் சமையல் அறையில்' மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய 'சால்ட் அன்ட் பெப்பர்' படத்தின் ரீமேக்தான். புதிதாக கதையை உருவாக்கி வெற்றி பெறுவதை விட ஏற்கெனவே வேறு மொழியில் வெளிவந்து ஹிட்டான படத்தை ரீமேக் செய்வது மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என்கிறார்கள் திரையுலகினர்.