அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
இந்தித் திரையுலகைப் பொறுத்தவரை அமீர் கான், ஷாரூக் கான், சல்மான் கான், ஆகியோர்தான் முன்னணி நட்சத்திர நடிகர்கள். அதனால் இவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது 'கான்' நடிகர்கள் என்று சொல்வது வழக்கம். பாலிவுட்டின் புதிய வரவான பிரணிதி சோப்ரா இந்த கான்களைப் பற்றி கமெண்ட் அடித்ததாக கடந்த சில நாட்களாக பாலிவுட்டில் ஒரே பரபரப்பு.
ஆனால், தான் அப்படி சொல்லவேயில்லை. நான் சொன்னதை தவறுதலாக திரித்து எழுதியிருக்கிறார்கள் என்று சொல்கிறார் பிரணிதி. இங்கிலாந்தில் நிதி மற்றும் பொருளாதாரப் படிப்பை முடித்தவரான இவர் 2011ம் ஆண்டு வெளிவந்த 'லேடீஸ் வெர்சஸ் ரிக்கா பாஹ்ல்' படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். 'கான்' பிரச்னை பற்றிய பிரச்சனைக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
“சீனியர் நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்,' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'ஆமாம், எனக்கும் அப்படி வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், அந்த படங்களில் எனக்கு நிறைய வேலை இருக்காது. அதனால், அந்த வாய்ப்புகளை நான் ஏற்கவில்லை,' என்று பதிலளித்தேன். அதில் யாருடைய பெயரையும் நான் குறிப்பிட்டு சொல்லவேயில்லை. நான் நடிக்காத படங்களைப் பற்றி எப்போதுமே பேசுவது கிடையாது. நான் நடிக்கும் படங்களைப் பற்றி மட்டும்தான் பேசுவேன். அதனால், நான் சொன்னதாக வந்த செய்தியில் துளியும் உண்மை கிடையாது. இப்படி சொல்லாத ஒன்றை செய்தியாக்கியது நியாயமே இல்லை,” என்று புலம்பித் தள்ளியிருக்கிறார் பிரணிதி.
இவர் இதுவரை வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.