'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் நாசரும் ஒருவர். இவரது மகன் பைசல், கடந்த இருவாரங்களுக்கும் முன்பு சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் பயணித்தவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக சைபலுக்கு சிகிச்சை நடந்து வருகிறது. உடம்பில் இவருக்கு பெரிய காயங்கள் எதுவும் கிடையாது, தலையில் மூளைக்கு அருகே இரத்தம் உறைந்துவிட்டது. இருதினங்களுக்கு முன்னர் தான் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டது. இருப்பினும் அவரது உடலில் முன்னேற்றம் இல்லை, தொடர்ந்து நினைவின்றி கோமா நிலையிலேயே, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள முன்னணி டாக்டர்களும் பலரும் அவருக்கு பல்வேறு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே சம்பவம் குறித்து நாசருக்கு பலரும் நேரிலும், போனிலும் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர். ரஜினி கூட சமீபத்தில், "டாக்டர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். இறைவனிடம் சரணாகதி அடையுங்கள்" என்று ரஜினி கூறியிருக்கிறார்.
ரஜினி கூறியது போல், மருத்துவர்கள் தங்களால் முடிந்தளவுக்கு சிகிச்சை அளித்தாலும், கடவுளின் கருணையும், ஆசியும் பாசிலுக்கு கிடைத்து, அவர் பூரண குணமடைய வேண்டும் என பிரார்த்திப்போம்.