இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் சினிமாவின் பட்ஜெட் பலகோடியை எட்டிவிட்டது. இதில் பாதி நடிகர், நடிகைகளின் சம்பளமாகவே செலவாகிவிடுகிறது. முன்பு ஹீரோக்கள் மட்டுமே கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குவார்கள், இப்போது ஹீரோயின்கள், இயக்குனர்களுமே கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் அடிக்கடி சொல்லும், ஆனால் மறுநாளே தயாரிப்பாளர்கள் கோடிக் கணக்கில் சம்பளத்தை கொடுப்பார்கள். இப்போது நடிகர் நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்து விட்டார்கள்.
மதுரை, ராமநாதபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் ஆர்.செல்வின்ராஜ் தலைமையில் நடந்தது. கவுரவ தலைவர் அன்பு செழியன் முன்னிலை வகித்தார்.
"திரைப்படங்களின் விலை மிகவும் உயர்ந்து விட்டது. ஆனால் வசூல் மிகவும் குறைந்து விட்டது. இதனால் பெரிய அளவில் முதலீடு செய்யும் விநியோகஸ்தர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே படத்தின் தயாரிப்பு செலவை கட்டுப்படுத்த வேண்டும். தயாரிப்பு செலவு அதிகரிப்பதற்கு நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் சம்பளத்தை கணிசமாக உயர்த்துவதே காரணம். எனவே அதிகமாக சம்பளம் பெறும் நடிகர் நடிகைகள், தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்" என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதே தீர்மானத்தை மற்ற ஏரியா விநியோகஸ்தர்களும் நிறைவேற்ற இருக்கிறார்கள்.