டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தி நடிகையும், லிங்கா படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்து வருபவருமான சோனாக்ஷி சின்ஹா மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்று கணித்திருந்தேன். அது நடந்து விட்டது, சந்தோஷமாக இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் மோடி பல முன்னேற்றமான மாற்றங்களை கொண்டு வந்தார். அதேப்போல இந்தியாவிலும் மாற்றங்களை கொண்டு வருவார் என்று உறுதியாக நம்புகிறேன். இது இந்தியாவின் மாற்றத்துக்கான நல்ல அறிகுறி.
மோடி தலைமையிலான அமைச்சரவையில் 7 பெண்களுக்கு பதவி கொடுத்திருப்பதை வரவேற்கிறேன் பாராட்டுகிறேன். அதுவும் மூன்றாவது அதிகாரத்தில் ஒரு பெண்ணுக்கு இடம் கொடுத்திருப்பது அறிந்து பூரிப்படைந்தேன். எனது அப்பா (சத்ருஹன் சின்ஹா) அரசியலில் இருந்தாலும் வீட்டில் அரசியல் பேச மாட்டோம். மற்ற பொது விஷயங்களைத்தான் பேசிக் கொள்வோம். அவர் தேர்தலில் வெற்றி பெற்றதால் பிசியாக இந்தியாவை சுற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு சமீபத்தில் இருதய ஆபரேஷன் நடந்தது. அதனால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை சென்று வருவது வழக்கம். அதனை செய்தியாக்க வேண்டாம் என்று மீடியாக்களை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சோனாக்ஷி கூறியிருக்கிறார்.