வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
பணம் எப்பேற்பட்ட உறவையும் பதம் பார்த்துவிடும் என்று சொல்வார்கள். இயக்குநர் சற்குணத்துக்கும் - இயக்குநர் லிங்குசாமிக்கும் இடையில் நடந்த விவகாரத்தைக் கேட்டால் மேலே சொன்னது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டுவிடுவோம். இருவருக்கும் இடையில் அப்படி என்ன நடந்தது?
தன் உதவியாளர் ராகவன் சொன்ன கதை சற்குணத்துக்குப் பிடித்துப்போனது. அக்கதையை படமாக எடுக்க எண்ணினார். அதே நேரம் படம் தயாரிக்கும் அளவுக்கு கையில் பணமில்லை. அவரது நண்பரான லிங்குசாமியோ ஒரே நேரத்தில் பல படங்களை தயாரித்துக் கொண்டிருந்தார். எனவே அவரை அணுகி மஞ்சப்பை படத்தை தான் தயாரிக்க இருப்பதாகவும், அதை அவுட்ரைட் அடிப்படையில் குறிப்பிட்ட தொகைக்கு வாங்கிக் கொள்ள முடியுமா என கேட்டார். டீல் ஓகே ஆகி..மளமளவென வளர்ந்தது மஞ்சப்பை.
இடையில் அக்ரிமெண்ட்டில் கூறியபடி பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார் லிங்குசாமி. அதோடு படத்தைப் பார்க்கவே நேரம் இல்லை என்று மாதகணக்கில் காலம் கடத்தியதால் வெகுண்டெழுந்துவிட்டார் சற்குணம். இது தொடர்பாக நடைபெற்ற தகராறில் இரண்டு தரப்பிலும் வார்த்தைகள் தடித்திருக்கின்றன. பிறகென்ன? இந்தப் பிரச்சனை காரணமாக லிங்குசாமிக்கும் சற்குணத்துக்கும் இடையில் நட்பு முறிந்துபோய்விட்டதாம்.
அடப்பாவமே...!