ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபுவை வைத்து புதிய படத்தை இயக்க இருந்தார். இந்தப் படத்தை பிரபல பைனான்சியர் செயின்ராஜ் ஜெயின் தயாரிப்பதாக இருந்தது. கதை விவாதம் நடைபெற்று முடிந்து, ப்ரீ புரடக்ஷன்ஸ் வேலைகள் நடைபெற்றுவந்தநிலையில், அந்தப் படத்தை நான் தயாரிக்க மாட்டேன் என்று விலகிவிட்டார் செயின்ராஜ் ஜெயின்.
விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படத்தின் தோல்வியும், அவரது மற்றொரு படமான அரிமா நம்பி பிசினஸ் ஆகாமல் கிடப்பதும் செயின்ராஜ் ஜெயினை யோசிக்க வைத்திருக்கிறது. மார்க்கெட் இல்லாத ஹீரோவை வைத்து படம் எடுத்து ஏன் நஷ்டப்பட வேண்டும் என்று நினைத்து பின்வாங்கிவிட்டார் என்று திரையுலகில் பேச்சு அடிபட்டது.
இந்நிலையில் விக்ரம் பிரபு நடிக்கும் படத்தைவிட்டு தயாரிப்பாளர் விலகியதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இந்தப் படத்தின் சில காட்சிகளை கதைப்படி காஷ்மீரில்தான் எடுத்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அவர் சொல்கிறபடி காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தினால் பட்ஜெட்டில் சுமார் 2 கோடி அதிகமாகிவிடும் என்று பயப்பட்டாராம் தயாரிப்பாளர். விக்ரம் பிரபுவை வைத்து எடுக்கும் படத்துக்கு இத்தனை பெரிய பட்ஜெட் தாங்காது என்று பயந்திருக்கிறார். இயக்குநரோ இறங்கி வரவில்லை. இந்தப் பிரச்சனை காரணமாகவே படத்தை டிராப் பண்ணிவிட்டாராம் செயின்ராஜ் ஜெயின்.