வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை விஜய்யை வைத்து இயக்கயிருந்தார் கெளதம்மேனன். ஆனால், ஹீரோக்களுக்கு கதை சொல்லும் பழக்கமே இல்லாத கெளதம், விஜய்யிடம் கதை சொல்ல மறுத்தார். அதனால், அவர் படத்தில் விஜய் நடிக்க மறுத்து விட்டார். அதன்காரணமாக அந்த படம் டிராப் ஆனது.
அதன்பிறகு தனது இயக்கத்தில் காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களில் நடித்த சூர்யாவைக் கொண்டு அடுத்த படத்திற்கான பூஜை போட்டார் கெளதம்மேனன். ஆனால், அவர் சொன்ன கதை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை. அதனால், அவருக்கு கொடுத்திருந்த கால்சீட்டை லிங்குசாமிக்கு கொடுத்து அஞ்சான் படத்தில் நடித்தார்
இப்படி தான் மலைபோல் நம்பியிருநத விஜய், சூர்யா என்ற இரண்டு நடிகர்களும் கைவிட்டதால், அடுத்து யாரை வைத்து படம் இயக்குவது என்று கைகளை பிசைந்து கொண்டு நின்ற கெளதம்மேனனுக்கு தக்க சமயத்தில் கைகொடுத்தவர்தான் சிம்பு. அதனால், அவரை வைத்து சட்டென்று மாறுது வானிலை என்று பெயர் வைத்து ஒரு படத்தை அவசரகதியில் ஆரம்பித்தார் கெளதமமேனன்.
ஆனால், அந்த நேரம் பார்த்து, அஜீத் அவரது இயக்கத்தில் நடிப்பதற்கு ஓ.கே சொன்னதால், சிம்பு படத்தை கிடப்பில் போட்ட அஜீத் படவேலைகளில் இறங்கினார் கெளதம். இந்த நிலையில், சமீபத்தில் கெளதம்மேனனை சந்தித்த சிம்பு, கிடப்பில் போட்ட பட வேலைகளை எப்போது தொடங்குவதாக உத்தேசம்? என்று கேட்டாராம். அதற்கு, இப்போதைக்கு என் கவனம் முழுவதும அஜீத்தின் 55வது படத்தின் மீதுதான் உள்ளது. அதனால், இந்த படத்தை ரிலீஸ் செய்வது வரை என்னால் வேறு படத்தில் கவனம் செலுத்த முடியாது. இப்படம் ரிலீசான பிறகு அந்த படத்தை தொடங்குவது பற்றி சொல்கிறேன் என்று கூலாக சொல்லி சிம்புவை அனுப்பி வைத்து விட்டாராம்.