நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
திலீப்பை விவாகரத்து செய்த மஞ்சுவாரியர் சினிமாவில் நடிக்க முழுவீச்சில் கதை கேட்கத் தொடங்கி விட்டார். முன்னதாக, தான் திருமணமான அறிகுறியே தனது உடம்பில் இல்லாத அளவுக்கு உடம்பை கட்டுக்கோப்பாக மாற்றியிருக்கும் மஞ்சுவாரியர், இப்போது முன்பு மாதிரி மலையாள சினிமாவையே சுற்றி வராமல், தென்னிந்திய சினிமாவில் பரவலாக நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.
அதனால், மலையாளத்தில் பல கதைகள் கேட்டவர், மோகன்லாலுடன் ஒரு படத்தில் நடிக்க மட்டுமே ஓ.கே செய்திருக்கிறார். அதையடுத்து, தெலுங்கில் நானியுடன் ஒரு படத்தில் கமிட்டாகி விட்டவர், தமிழையும் விடவில்லை. சில அபிமான டைரக்டர்களை சந்தித்து தனது மறுபிரவேசம் குறித்து தகவல் கொடுத்து, படவேட்டையில் ஈடுபட்டார்.
அதன்காரணமாக, தற்போது அஞ்சான் படத்தை முடித்துள்ள சூர்யா, அடுத்து நடிக்கும் படத்தில் மஞ்சுவாரியருக்கு கதாநாயகி வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். கோலிவுட் நடிகைகளை மாதிரி குத்தாட்ட கோதாவில் இறங்காத அவர், வித்தியாசமான, வெயிட்டான கதாபாத்திரங்களில் மட்டுமே வழக்கம்போல் நடிப்பேன் என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்டிருப்பதோடு, இப்போதைக்கு எனக்கு தேவை நல்ல படம். அதேசமயம், சம்பள விசயத்தில் எப்போதும் போல் நான் அடக்கம்தான் என்று குறைவான சம்பளத்தில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
இதனால் குறைவான கூலியில், பெரிய நடிகை கிடைத்து விட்டார் என்று சில படாதிபதிகள் மஞ்சுவாரியரை வட்டம் போட தொடங்கியிருக்கிறார்கள்.