டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
2002ம் ஆண்டு மும்பை பாந்த்ரா பகுதியில் மது குடித்து விட்டு தாறுமாறாக கார் ஓட்டிச்சென்ற இந்தி நடிகர் சல்மான்கான், சாலை ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றினார். அதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, நடந்த வழக்கில் சல்மான்கானுக்கு எதிர்ப்பாக சாட்சிகள் கூறப்பட்டதால், இப்போது இந்த வழக்கில் வசமாக சிக்கியிருக்கிறார் சல்மான்கான்.
இந்த நிலையில், தற்போது மும்பை ஐகோர்ட்டில் சல்மானின் வழக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதையடுத்து, அவர் வழக்கும் நடைபெறுவதை டி.வி சேனல்களில் ஒளிபரப்பு செய்து வருவதால் இன்னும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், சல்மான்கான், தனது வழக்கை டி.வியில் ஒளிபரப்புவது தனக்கு அவமரியாதையாக இருக்கிறது, அதனால் அதை ஒளிபரப்புவதை தடை செய்ய வேண்டும் என்று இப்போது ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இதையடுத்து, சல்மான்கானின் மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, அவரது கோரிக்கையை ஏற்று, அவரது வழக்கை டிவியில் ஒளிபரப்புவது மட்டுமின்றி, இணையதளங்களில் வெளியிடுவதற்கும் தடை விதித்துள்ளாராம். இதைத் தொடர்ந்து மே 21-ம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சல்மானின் வழக்கு அடங்கிய வீடியோ கேசட் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.