ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளவர். மலையாளத்தில் 'மனசினக்கரே' என்ற மலையாளப் படம் மூலம் 2003ம் ஆண்டில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து 2005ல் வெளிவந்த 'ஐயா' படம் மூலம் தமிழிலும், 2006ம் ஆண்டு வெளிவந்த 'லட்சுமி' என்ற படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.
தமிழில் தொடர்ந்து ரஜினிகாந்த், சரத்குமார், அஜித், விஜய், சூர்யா, விஷால், ஆர்யா, தனுஷ், சிம்பு, ஜீவா, உதயநிதி ஸ்டாலின் போன்ற பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் காதல் ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. முதலில் சிம்புவைக் காதலித்தார், அதன் பின் பிரபுதேவாவைக் காதலித்தார். அவரைத் திருமணம் செய்து கொள்வதற்காக இந்து மதத்திற்கும் மாறினார். பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை, பிரபுதேவாவை விட்டுப் பிரிந்தார்.
எந்த பிரச்சனை வந்தாலும் அதைச் சமாளித்து மீண்டும் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நயன்தாரா. சமீப காலத்தில் எந்த ஒரு நடிகையும் இவரைப் போல் மீடியாக்களில் பரபரப்பாகப் பேசப்பட்டதில்லை. இவருடைய வாழ்க்கையைப் பற்றிய பயோகிராபி ஒன்றை எழுத ஒரு எழுத்தாளர் ஆசைப்பட்டதாகவும், ஆனால், அதற்கு நயன்தாரா சம்மதிக்கவில்லை என்றும் தெரிகிறது.
சினிமா உலகத்தைப் பற்றியும், நடிகைகளைப் பற்றியும் பத்திரிகைகளில் பல தொடர்கள் வந்துள்ளன. அவற்றிற்கு அதிகமான வரவேற்பும் கிடைப்பதால் ஒருவர் இப்படி முயற்சித்திருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால், அதனால் பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்பதால் நயன்தாரா அப்படி ஒரு விஷயத்திற்கு துளியும் சம்மதிக்கவில்லை என்று சொல்கிறார்கள்.