தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரசன்னா, லைலா நடித்த 'கண்ட நாள் முதல்' படத்தில் லைலாவின் தங்கையாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர் ரெஜினா. அடுத்து சில படங்களில் கதாநாயகியாக நடித்தாலும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
சென்ற ஆண்டு சிவகார்த்திகேயன் ஜோடியாக அவர் நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படம் அவருக்கு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்தப் பெயரை வைத்து அப்படியே ஆந்திராப் பக்கம் தாவியவருக்கு அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அவர் நாயகியாக நடித்த 'கொத்த ஜன்டா' என்ற தெலுங்குப் படம் கடந்த மாதம் வெளியாகியது. படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் ரெஜினாவை தெலுங்கு இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மிகவும் பிடித்துவிட்டது போலும். தற்போது நான்கு தெலுங்குப் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் ரெஜினா.
“சங்கரா, ரா ரா கிருஷ்ணய்யா, பில்ல நூவு லேனி ஜீவிதம், பவர்” ஆகிய படங்களின் நாயகி ரெஜினாதான். இவற்றில் 'பவர்' படத்தில் முன்னணி நடிகரான ரவி தேஜாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். படத்தின் மற்றொரு நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார். மற்ற படங்களில் இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த ஆண்டில் தெலுங்கில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் ரெஜினி.
'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தின் சிறப்பாக நடித்திருந்தாலும் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காததில் மிகவும் வருத்தமடைந்துள்ளாராம் ரெஜினா.
தமிழில் அறிமுகமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் கிடைக்காத புகழை, தெலுங்கில் ஒரே ஆண்டில் பெற்றதை அவர் பெருமையாக நினைக்கிறாராம். தமிழில் பெரிதாக வேறு எந்த படங்களும் அவருக்கு இல்லாத நிலையில் இனி தமிழ்ப் பக்கம் வருவாரா என்பது சந்தேகம்தான்.