இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
1985ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கிய ஒரு தாயின் சபதம் படத்தில் அறிமுகமானவர் பிருத்விராஜ். தென்னிந்திய மொழிகளில் சுமார் 113 படங்களில் நடித்து விட்ட பிருத்விராஜ் இப்போது சின்னத்திரையின் முக்கிய நட்சத்திரம். இவர் நடத்திய சவால் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். தற்போது வாணி ராணி நிகழ்ச்சியில் ராணியின் கணவர் சாமியாக நடித்து வருகிறார். "சினிமாவை நம்பி நான் இல்லை" என்று உறுதிபட கூறுகிறார் பிருத்விராஜ்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: கலை என்ற தராசில் சின்னத்திரை மேலே இருக்கும் தட்டாகவும், பெரிய திரை கீழே இருக்கும் தட்டாகவுமே பார்க்கப்படுகிறது. அது தவறு இரண்டுமே ஒன்றுதான். டி.வியை விட சினிமாதான் உயர்ந்தது என்று கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. சினிமாவில் ஒரு நாளைக்கு ஒரு சீன்தான் எடுப்பார்கள். சீரியலில் 6 சீன் எடுப்பார்கள். சினிமாவில் நான்கு வரி வசனம் பேசினால் போதும், சீரியலில் பக்கம் பக்கமாக பேச வேண்டும். உண்மையில் கஷ்டமானது சின்னத்திரைதான்.
ஒரு தாயின் சபதத்திற்கு பிறகு 113 படங்களில் நடித்து விட்டேன் குழந்தை நட்சத்திரமாக நடித்ததையும் சேர்த்தால் 230 படங்கள் வரும். இப்போதும் 6 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். 40 வயதை கடந்து விட்டேன். இனி கல்லூரி மாணவனாக, லவ்வர் பாயாக நடிக்க முடியாது. ஆனால் நல்ல சவாலான கேரக்டரில் நடிக்க முடியும். அப்படி இல்லாத கேரக்டர்களில் நடிக்க மாட்டேன். சொன்னால் நம்ப மாட்டார்கள். சமீபத்தில் 6 படங்களை வேண்டாம் என்று ஒதுக்கி இருக்கிறேன்.
சவால் நிகழ்ச்சியை 13 வருடங்கள் தொடர்ச்சியாக நடத்தினேன். தொலைக்காட்சி வரலாற்றில் இது ஒரு உலக சாதனை. ஆனால் அதனை அங்கீகரிக்க ஆள் இல்லை. சவால் நிகழ்ச்சிக்கு சின்ன பிரேக் விட்டிருக்கிறேன். விரைவில் ஆரம்பிக்க இருக்கிறேன். அடுத்து சினிமா இயக்கும் ஆர்வம் இருக்கிறது. விரைவில் படம் இயக்குனேன். சினிமா மீது பக்தி உண்டு, ஆர்வம் உண்டு. ஆனால் அதை மட்டும் நம்பி நான் இல்லை. என்கிறார் பிருத்வி ராஜ்.