டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தற்போது பென்சில் படத்தில் நடித்து வரும் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்கு த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த தலைப்புக்காகவே படத்திற்கு விநியோகஸ்தர்கள் பிசினஸ் பேசி வருகிறார்களாம்.
தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய சென்றபோது "இரண்டு பெரிய நட்சத்திரங்களின் பெயரை வைத்திருக்கிறீர்கள். அதனால் அவர்களிடம் அனுமதி கடிதம் வாங்கி வந்தால் மட்டுமே இந்த தலைப்பை பதிவு செய்ய முடியும்" என்று கூறிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாசின் தீவிர முயற்சியாலும், உதயநிதி ஸ்டாலின் சிபாரிசாலும் நயன்தாராவை அணுகினார்கள். அவர் கதை கேட்டுவிட்டு முடிவை சொல்கிறேன் என்று கூறினார். இதைத் தொடர்ந்து படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஐதராபாத் சென்று நயன்தாராவிடம் கதை சொன்னார். கதை பிடித்து போகவே என் தனிப்பட்ட வாழ்க்கையை எந்த இடத்திலும் குறிப்பிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஒப்புதல் கடிதம் கொடுத்துவிட்டார்.
தற்போது த்ரிஷாவிடம் ஒப்புதல் வாங்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதுவரை த்ரிஷா தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. த்ரிஷாவின் பெயரை வைப்பதால் படம் நல்ல விலைக்கு வியாபாரமாக தயாராக இருப்பதாக யாரோ த்ரிஷாவின் தாயாருக்கு தகவல் சொல்ல அவரும் பெயரை பயன்படுத்த ராயல்டி கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை படத் தரப்பு மறுக்கிறது. "த்ரிஷா பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் அவரிடம் கதை சொல்ல நேரம் கிடைக்கவில்லை. கதையை கேட்டால் ஒப்புக் கொள்வார்" என்கிறார்கள்.