அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
சேலத்தைச் சேர்ந்த பி.நிஷா என்ற பெண் 7 வருடம் கடுமையாக உழைத்து 0 2 9 (சீரோ டூ நையன்) என்ற அனிமேஷன் படத்தை உருவாக்கி இருக்கிறார். அவரே தயாரிப்பாளர், இயக்குனர், இதுபற்றி அவர் கூறியதாவது: அனிமேஷன் படித்திருக்கிறேன். வெளிநாட்டில் உருவாகும் அனிமேஷன் படங்களை சினிமாவிலும், டி.வியிலும் பார்த்து விட்டு நாம் ஏன் அப்படி உருவாக்ககூடாது என்று அது தொடர்பாக நிறைய படித்தேன். பொம்மை, விலங்குகள், மனிதர்கள்தான் அனிமேஷன் படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நாம ஏன் அன்றாடம் பயன்படுத்தும் எண்களுக்கு உருவம் கொடுத்து, உணர்வு கொடுத்து ஒரு கதைய உருவாக்க கூடாது என்று நினைத்தேன். அதன் வெளிப்பாடாக சீரோ முதல் 9 வரையிலான எண்களுக்கு உயிர் கொடுத்து நடிக்க வைத்தேன்.
இந்த பத்து நம்பர்களும் ஒரு புதையலைத் தேடி செல்கின்றன. அப்போது அவர்களுக்குள் வரும் மோதல், ஈகோ, துரோகம், காதல்தான் கதை. கடைசியில் மனிதனுக்கு ஈகோ இருக்க கூடாது. ஈகோ இல்லாவிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை என்கிற மெசோஜோடு படத்தை முடிக்கிறேன். சுமார் 6 வருடங்களாக 150 கம்ப்பயூட்டர் நிபுணர்களுடன் இணைந்து இதனை உருவாக்கி இருக்கிறேன். இதனை வெளியிட முதலில் தயக்கம் இருந்தது. தற்போது கோச்சடையான் படத்துக்கு மக்கள் அளித்த ஆதரவைப் பார்த்ததும் வெளியிடும் தைரியம் வந்து விட்டது. தமிழ் தவிர பிற இந்திய மொழிகளிலும் டப் செய்ய இருக்கிறோம். என்கிறார் நிஷா.