ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்திய திரை உலகத்தைப் பொறுத்த வரை லேடி ஆக்ஷன் ஸ்டாராக இருந்த ஒரே நடிகை விஜயசாந்தி மட்டுமே. அவருக்கு அடுத்து கன்னடத் திரையுலகத்தைச் சேர்ந்த மாலாஸ்ரீயை ஆக்ஷன் நடிகை என்பார்கள். அதன் பின் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக அப்படி ஒரு பட்டத்தை எந்த ஒரு நடிகையுமே பெறவில்லை. அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் விதத்தில் 'ராணி ருத்ரம்மா, பாகுபலி' தெலுங்குப் படங்களில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார் அனுஷ்கா. அதே சமயம், அனுஷ்காவுக்குப் போட்டியாக தமன்னாவும் ஆக்ஷன் களத்தில் குதிக்க உள்ளார்.
பாகுபலி படத்தில் தமன்னா இளவரசி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக கத்திச் சண்டை, வாள்வீச்சு, மற்ற சண்டைக் கலை என தமன்னா பயிற்சி எடுக்க ஆரம்பித்துவிட்டாராம். ஏற்கனெவே, ஒல்லியாக இருக்கும் தமன்னா, சண்டைக் காட்சிகளில் நடிக்க உள்ளதால் உடம்பை இன்னும் கட்டுப்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம்.
'வீரம்' படத்தில் மீண்டும் தமிழில் வெற்றிகரமாக ரீஎன்ட்ரி ஆனாலும் தமன்னாவுக்கு அடுத்து தமிழில் வாய்ப்புகள் வரவில்லை என்பது கவலையாக உள்ளதாம். அதே சமயம், தெலுங்கில் 'பாகுபலி', மகேஷ்பாபுவுடன் 'அகாடு' படங்களில் நடிப்பது அவருக்குக் கவலையைப் போக்கிவிட்டதாம்.
தமன்னாவின் கவலை தமிழ் இயக்குனர்களுக்குத் தெரியுமா ?