'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
களவாணி படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்து தமிழில் முன்னணி கதாநாயகி வரிசையில் இடம் பிடித்தவர் ஓவியா. தமிழ்த்திரையுலகில் தற்போது உள்ள அழகிகளில் இவரும் ஒருவர் என்கிற அளவுக்கு அழகியான ஓவியா அத்திப்பூத்தாற்போல்தான் தமிழ்ப்படங்களில் தலையைக்காட்டுகிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரித்த மதயானைக்கூட்டம் படத்தை அடுத்து, சமீபத்தில் வெளி வந்த யாமிருக்க பயமே படத்தில் கிளுகிளுப்பான வேடத்தில் நடித்திருந்தார். இதை வைத்து, ஒருவேளை ஓவியா மலையாளத்தில் பிஸி போலிருக்கிறது. அதனால்தான் எப்போதாவது இந்தப்பக்கம் வந்துவிட்டுப்போகிறார் என்று நம்ம ரசிகர்கள் நினைத்திருக்கக்கூடும். உண்மை என்ன தெரியுமா? மலையாளத்தில் ஓவியாவுக்கு படங்களே இல்லை. அவருக்கு அங்கே யாரும் சான்ஸ் தருவதே இல்லையாம்.
இதை சொல்வது யார் தெரியுமா? ஓவியாவேதான்...! மதயானைக்கூட்டம் படத்தில் மலையாளப்பெண்ணாகவே நடித்திருந்தார் ஓவியா. தமிழ்ப்படத்தில் மலையாளப்பெண்ணாக நடித்த ஓவியாவுக்கு மலையாளப்படத்தில் மலையாளம் பேசி நடிக்க வேண்டும் என்று கொள்ளை ஆசையாம். நடிக்க வேண்டியதுதானே...யார் தடுத்தது? மலையாளியான எனக்கு மலையாளம் பேசி என் தாய்மொழியில் நடிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் மலையாளத்தில் ஏனோ எனக்கு சான்ஸ் யாரும் தரவே இல்லை. என்று வருத்தப்படுகிறார் ஓவியா.