ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்து விட்ட சந்தானம், அந்த படம் வெற்றி பெற்றிருப்பதால், மிகுந்த உற்சாகத்தில இருக்கிறார். ஆனபோதும், அடுத்து மீண்டும் கதாநாயகனாக நடிப்பேன் என்று சொன்ன அவர், இப்போது சில படங்களில் காமெடியனாக நடிக்க சான்ஸ் கிடைத்திருப்பதால், ஹீரோ வேடத்துக்கு ஒரு சிறிய இடைவெளி கொடுத்து விட்டு பின்னர் நடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்.
குறிப்பாக, எந்திரனுக்குப்பிறகு மீண்டும் ரஜினியுடன் லிங்கா படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்திருப்பது சந்தானத்திற்கு பெரிய எனர்ஜியாக உள்ளது. காரணம், எந்திரனில் ரஜினியுடன் பெரிய அளவில் காமெடி பண்ண சான்ஸ் கிடைக்கவில்லை. ஆனால், இந்த லிங்காவிலோ ரஜினியின் நண்பராக படம் முழுக்க அவருடன் வருகிறாராம்.
ஏற்கனவே ரஜினியும் காமெடியாக நடிப்பதில் வல்லவர் என்பதால், இரண்டு பேரும் சேர்ந்து காமெடியில் கலக்கி எடுக்கப்போகிறார்களாம். விரைவில் நடைபெறவிருக்கும் லிங்கா படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பின்போது ரஜினியுடன் நடிக்கவிருக்கும் சந்தானம், ஏற்கனவே அப்படத்தின் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் காமெடி டயலாக்குகளை எழுதுவதில் சிறந்தவர் என்றபோதிலும தனது பங்குக்கும் சில பஞ்ச் டயலாக்குகளை ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம். அதை படத்தில் பயன்படுத்திக்கொள்ள ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் ஓ.கே சொல்லிவிட்டால், இளவட்ட ஹீரோக்களுடன் கலக்குவது போன்று ரஜினியுடனும் காமெடி காட்சிகளில் கலக்கல் பண்ணுவாராம் சந்தானம்.