பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஆடுகளம் படத்தை அடுத்து சிம்புவை வைத்து படம் இயக்கும் முயற்சியில் இறங்கினார் வெற்றிமாறன். அவரது இந்த முயற்சி தோல்வியடைந்ததும் தனுஷிடமே மீண்டும் சரண் அடைந்தார் வெற்றிமாறன். நாம் இயக்குநராக அறிமுகப்படுத்தியவர், தன் எதிரியைத் தேடிப்போய்விட்டாரே என்ற கடுப்பில் இருந்த தனுஷ், வெற்றிமாறன் மீண்டும் தேடி வந்தபோது, பழசை எல்லாம் மறந்துவிட்டு அவரை மன்னித்து கால்ஷீட் தரவும் சம்மதித்தார்.
தனுஷ் கால்ஷீட் கிடைத்ததும், அழகிரி மகன் துரைதயாநிதியிடம் பெரும்தொகையை அட்வான்ஸாக வாங்கினார் வெற்றிமாறன். வெற்றிமாறனுக்கு அட்வான்ஸ் கொடுத்த கையோடு,பெரிய பங்களா ஒன்றை வாடகைக்குப் பிடித்துக் கொடுத்து கதை டிஸ்கஷன் பண்ணச் சொன்னார் துரைதயாநிதி. ஏறக்குறைய இரண்டரை வருடங்களுக்கு மேலாகியும் வெற்றிமாறன் இன்னும் கதையை ரெடி பண்ணவில்லை.கட்டுக்கட்டாய் கரன்ஸியை வாங்கிக் கொண்டு கதை சொல்லாமல் டபாய்க்கிறாரே..! - என்று கடுப்பான துரைதயாநிதி, வெற்றிமாறனிடம் கதை என்னாச்சு? என்று கேட்டிருக்கிறார்.
கதை ரெடி சார் என்று முழுக்க முழுக்க காட்டுக்குள்ளேயே நடக்கும் கதை ஒன்றை சொல்லி இருக்கிறார் வெற்றிமாறன். அந்தக் கதையை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் அழகிரியின் மகன். ஓகே..நாளைக்கு வேறு ஒரு கதை சொல்றேன் - என்று புறப்பட்டுப்போன வெற்றிமாறன் மறுபடி வரவே இல்லையாம். இதற்கிடையில் தனுஷே, துரைதயாநிதிக்கு போன் செய்து, பாஸ் எப்ப கால்ஷீட் வேணும்? என்று கேட்கிறாராம். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறாராம் துரைதயாநிதி.