பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அம்முவாகிய நான் படத்தை இயக்கிய பத்மாமகன் இயக்கத்தில், விமல், பிரசன்னா, ரிச்சர்டு, அருந்ததி, நந்தகி நடித்திருக்கும் படம் நேற்று இன்று. இத்தனை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப் படம் 10 ஆயிரம் முதலீட்டில் தொடங்கப்பட்டது என்று சொன்னால் நம்புவீர்களா? இயக்குநர் பத்மாமகன் சொல்கிறார் கேளுங்கள்...
அம்முவாகிய நான் படத்தை அடுத்து நல்ல படம் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் காத்திருந்து... காத்திருந்து... சோர்ந்து போனேன். சினிமாதான் எல்லாம் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு நல்ல படம் எடுக்க முடியவில்லையே என்கிற விரக்தி. தினமும் முழு பாட்டில் குடிக்க ஆரம்பித்தேன். நாளாக நாளாக இந்த அளவு அதிகரித்துக் கொண்டே போனது. கண் திறந்திருக்கும் நேரமெல்லாம் குடிப்பவன் ஆனேன். ஒரு நாளைக்கு 5 பாக்கெட் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த நிலை மாறி அது 10 பாக்கெட் ஆனது.
ஒரு புத்தாண்டு தினத்தன்று வீட்டுக்கு வெளியே எல்லோரும் ஆனந்தமாக புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். நானோ உள்ளே சரக்குப் போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அது என் மனதை தலைகீழாய் மாற்றிப் போட்டு விட்டது. "பிறப்பும் இறப்பும் மட்டும்தான் உன்னைத் தேடி வரும். வேறு எது வேண்டுமென்றாலும் நீதான் அதை தேடிப் போக வேண்டும்." இதுதான் அந்த மெசேஜ். மது குடிப்பதை அந்த நிமிடமே நான் நிறுத்தி விட்டேன். ஒரு மாதத்தில் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தையும் விட்டு விட்டேன்.
ஒரே கூத்தடிப்பாக இருக்கும் வகையில் ஒரு படக்கதை தயார் செய்தேன். அந்த படத்துக்கு கூத்து என்றே பெயர் வைத்தேன். ஆனால் இதற்குள் நான் ஒரு மொடாக்குடியன் என்ற கெட்ட பெயர் இண்டஸ்ட்ரி முழுக்க பரவிவிட்டதால், எனக்கு படம் கொடுக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை.
ஒரு நாள். என் மனைவி மாலதியை அழைத்தேன். "இந்த படத்துக்கு நீதான் தயாரிப்பாளர். நான் தான் டைரக்டர்" என்றேன். என் மனைவி ரொம்ப நல்லவர். நான் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிவிடக் கூடியவர். உடனே "சரி" என்றார். "படத் தயாரிப்புச் செலவுக்கு உன்னால் எவ்வளவு கொடுக்க முடியும்?" என்று கேட்டேன். "என்னிடம் ஏது பணம்? அறுந்துபோன கம்மல் ஜிமிக்கிதான் பாக்கி இருக்கிறது. வேண்டுமானால் அதை எடுத்துக் கொண்டு போங்கள்" என்றார். அதை எடுத்துக் கொண்டுபோய் கடையில் கொடுத்தேன். 12ஆயிரம் ரூபாய் கைக்கு வந்தது. அதில் 2ஆயிரம் ரூபாயை வீட்டுச் செலவுக்குக் கொடுத்தேன். மீதி இருந்த 10ஆயிரம் ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட படம்தான் கூத்து. அந்த கூத்துதான் தற்போது நேற்று இன்று என்று பெயர் மாறி அடுத்த மாதம் வெளியாக உள்ளது. என்றார்.
சினிமாவில் இப்படியெல்லாம் வெளிப்படையாகப் பேசுபவர்கள் அரிது.