சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
சந்தானம் முழுநேர காமெடியனாக இருந்தபோது படத்துக்குப்படம் அவரது சம்பளம் உயர்ந்து கொண்டிருந்தது. சம்பளத்தை அதிகமாக கொடுத்தால்தான் கால்சீட் தருவார் என்று அவராக கேட்காமலேயே சில படாதிபதிகளே அவரது படக்கூலியை உயர்த்தி விட்டனர். பின்னர் அவர்களே சந்தானம் படத்துக்குப்படம் சம்பளத்தை உயர்த்க்கொண்டேஇருக்கிறார் என்று குறை சொன்னதும் நடந்திருக்கிறது.
இந்த நிலையில், எதையும் கண்டுகொள்ளாமல், என் கடன், பணி செய்து கிடப்பதே என்பது போல் தன்னைப்பற்றி வந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித பதிலும் சொல்லாமல் சதா காமெடியைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்த சந்தானம், தற்போது கோடம்பாக்கத்தின் காமெடி கிங்காகி விட்டார். ஹீரோவாக நடித்த படமும் கையை கடிக்காமல் ஹிட்டடித்து விட்டதால், எஸ்கேப்பாகி விட்டார் சந்தானம.
அதனால், இப்போது இன்னும் அவரது படக்கூலி எகிறியுள்ளது. ஒரு நாளைக்கு 10 லட்சம் அல்லது அதற்கு மேலும் கேட்கிறாராம். ஆனால், இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையில் வேறு சரியான காமெடியன் யாரும் இல்லாததால் சந்தானம் கேட்ட பணத்தை சொல்லியடிக்க படாதிபதிகள் போட்டி போடுகின்றனர். ஆக, ஹீரோவுக்கு முன்பும, ஹீரோவுக்கும் பின்பும் சந்தானத்தின் மார்க்கெட் பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது.