டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலாலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், டுவிட்டரில் இணைந்துள்ளாராம். இன்றைய நவநாகரீக உலகத்தில், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பேஸ்புக், டுவிட்டர் என்று சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். நடிகர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என அனைவரும் சமூக வலைதளங்களில் இணைந்து இருக்கின்றனர். அந்தவகையில், சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் டுவிட்டரில் இணைந்தார். இவர் இணைந்த 24 மணிநேரத்தில் சுமார் 2.25 லட்சம் பேர் அவரை பாலோ பண்ண தொடங்கினர். தற்போது வரை சுமார் 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் அவரை பாலோ செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினி, டுவிட்டரில் இணைந்ததற்கு முக்கிய காரணமே பிரதமர் மோடி தானாம். தேர்தலுக்கு முன்பாக பிரசாரம் செய்வதற்காக தமிழகம் வந்தார் மோடி. அப்போது நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் போது இருவரும் நிறைய விஷங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது தான் மோடி, ரஜினியை டுவிட்டரில் சேர சொல்லியிருக்கிறார். மோடியின் அறிவுறுத்தலாலேயே ரஜினி, டுவிட்டரில் சேர்ந்துள்ளாராம்.