சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் |
'அட்டகத்தி' என்ற படத்தில் அறிமுகமாகி அந்த படம் ஓரளவிற்கு பெயர் வாங்கித் தந்ததுமே தலைகால் புரியாமல் ஆட ஆரம்பித்தவர் அந்த படத்தின் நாயகனாக நடித்த தினேஷ் என்கிறார்கள். அந்த படத்திற்கடுத்து அவர் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்ட படம் 'வாராயோ வெண்ணிலாவே'. விக்ரமன் இயக்கி வந்ததும், தெரியாமல் போனதும், தெரியாமல் போன படமான 'நினைத்தது யாரோ' படத்தைத் தயாரித்த நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. விக்ரமன் படத்திலேயே பல கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்த நிறுவனம், இந்த படத்திலாவது நாலு காசு சம்பாதிக்கலாம் என்று பார்த்தால் அதற்கு தினேஷ் தடையாக இருந்திருக்கிறாராம்.
எப்போதோ வெளிவர வேண்டிய படம்தான் 'வாராயோ வெண்ணிலாவே'. ஆனால், இடையில் 'குக்கூ' படத்தில் நடிக்க ஆரம்பித்து இந்த படத்தின் படப்பிடிப்புக்கு தினேஷ் வராமலே போய்விட்டாராம். குக்கூ படம் எப்படியும் வெற்றியைக் குவித்து விடும், கோடிகளில் சம்பளத்தை உயர்த்தி விடலாம் என்று நினைத்தவருக்கு அந்த படம் குப்புற விழுந்துவிடவே இப்போது தவிக்கிறாராம்.
சினிமாவைப் பொறுத்தவரை எந்த படம் ஓடும், எந்த படம் ஓடாது என்று யாராலும் கணிக்க முடியாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்தான். வளர்ந்து வரும் நேரத்தில் அட்டகத்தி தினேஷின் இந்த ஆட்டம், அவருக்கே ஆபத்தாக முடியும் என்கிறார்கள் அனுபவசாலிகள். இப்படித்தான் இதற்கு முன் சில ஹீரோக்கள் ஓடும் என்று நினைத்த படங்கள் ஓடாமல் போனதும், ஓடாது என்று நினைத்த சில படங்கள் வெற்றிகரமாக ஓடியதையும் அவர்கள் நினைவு கூறுகிறார்கள். இன்றைய புது ஹீரோக்கள் தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு சமீபத்திய உதாரணமாக தினேஷைத்தான் சொல்கிறார்களாம்…!