ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2009ல் நீலத்தாமரை என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். அதையடுத்து தமிழுக்கு வந்து வீரசேகரன், சிந்து சமவெளி போன்ற படங்களில் நடித்தார். இதில் சிந்துசமவெளியில் சொந்த மாமனாருடன் தவறான உறவு வைத்துக்கொள்ளும் மருமகளாக நடித்ததால் சர்ச்சைக்குரிய நடிகையானார். ஆனபோதும், பிரபுசாலமன் இயக்கத்தில் அவர் நடித்த மைனா அவர் மீது விழுந்திருந்த ஆபாச நடிகை என்ற இமேஜை மாற்றியது.
இந்தநிலையில் அனகா என்று வைத்திருந்த தனது பெயரையும் பின்னர் அமலாபால் என்று மாற்றிக்கொண்டவர், தெய்வத்திருமகளில் விக்ரம், வேட்டையில் ஆர்யா, காதலில் சொதப்புவது எப்படியில் சித்தார்த், தலைவாவில் விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையானார்.
அதன்பிறகு தனுஷ், ஜெயம்ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த, அமலாபால் இன்னும் 3 வருடத்திற்கு சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். ஆனால், எதிர்பாராதவிதமாக தனது காதலர் டைரக்டர் விஜய்யை ஜூன் 12-ந்தேதி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டதால், புதிதாக சைன் பண்ணியிருந்த சில படங்களில் இருந்து விலகி விட்டார்
அந்தவகையில், அமலாபாலின் கடைசி படமாக அவரது தாய் மொழியான மலையாளத்தில் நடித்து வந்த மிலி படம் அமைந்திருக்கிறது. இந்த படம் அமலாபாலுக்கு பெரிய திருப்தியாக அமைந்திருக்கிறதாம். காரணம், இந்த படத்தில் டைட்டில் ரோலில் நடிப்பதோடு, நல்ல குடும்ப பின்னணியில் நடக்கும் கதைக்களமாம். அதனால், தனது கடைசி படம் தன்னை பெருமைப்படுத்தும் விதமாக அமைந்திருப்பதாக கூறுகிறார் அமலாபால்.