ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூப்பர் ஸ்டார் ரஜினி பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது அவரைப்போலவே சாயல்கொண்ட நடிகராக வலம் வந்தவர் நளினிகாந்த். தெலுங்கில் தாசரி நாராயணராவ் இயக்கிய ரங்கோன் ரவுடி படத்தின் மூலம் அறிமுகமானார். அவர்தான் நளினிகாந்த் என்று பெயரும் வைத்தார். கே.பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு, ராசுக்குட்டி படங்களில் வில்லனாக நடித்தார். தென்னிந்திய மொழிகளில் 90 படங்களுக்கு மேல் நடித்த நளினிகாந்த் அதன் பிறகு தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து இயக்கினார்.
தற்போது யாமிருக்க பயமே படத்தின் மூலம் சினிமாவில் ரீ- என்ட்ரி ஆகியிருக்கிறார். அந்த படத்தில் பேய்மாளிகையில் வசிக்கும் முதியவராக நடித்துள்ளார். அடுத்து ஏ.ஆர்.முருகாசின் கத்தி படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
"சினிமாவை விட்டு விலகி 20 வருடங்கள் ஆகிவிட்டது. சின்னத்திரையில் இருந்தேன். திடீரென்று ஒரு நாள் என்னை அழைத்து யாமிருக்க பயமேவில் நடிக்க வைத்தார்கள். படத்தின் என் கேரக்டர் பேசப்படுவதால் நிறைய வாய்ப்புகள் வருகிறது. தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளேன்" என்கிறார் நளினிகாந்த்.