'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அருந்ததி படத்தையடுத்து அனுஷ்கா, ராணி ருத்ரம்மாதேவி, பாகுபாலி போன்ற சரித்திர படங்களில் அதிரடியான கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் அனுஷ்கா. பல வருட இடைவெளிக்குப்பிறகு தனது திறமைக்கு தீனி போடும் படங்கள் என்பதால் இந்த படங்களுக்காக குதிரையேற்றம், வாள் சண்டை என பல பயிற்சிகளை பல மாதங்களாக எடுத்து இப்படங்களில் நடித்து வருகிறார்.
இதில் ராணி ருத்ரம்மா தேவி படத்தின் வசன காட்சிகள் அனைத்தும் முடிந்து இப்போது இறுதிகட்டமாக சண்டை காட்சிகள் படமாகி வருகிறது. அதனால், பாகுபாலி மற்றும் அஜீத்தின் 55வது படங்களிலும் நடித்துக்கொண்டே அப்படத்திற்கும் கால்சீட் கொடுத்துள்ளார் அனுஷ்கா.
அந்த வகையில், கடந்த சில வாரங்களாக எதிரி நாட்டு மன்னனுடன் அனுஷ்கா ஆவேசமாக போரிடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்ததாம். அப்போது, ராணி ருத்ரம்மா தேவி கெட்டப்பில் வாள் சுழற்றி அதிரடியாக சண்டை செய்தபடி நடித்திருக்கிறார் அனுஷ்கா. ஆனால் ஒரு கட்டத்தில் இவர் சுழன்று சுழன்று எதிரி மீது தாக்கியபோது, அனுஷ்காவின் உடம்பில் சதை பிடிப்பு ஏற்பட்டு விட்டதாம்.
அதனால், பின்னர் அவரால் வலியை தாங்கிக்கொண்டு நடிப்பை தொடர முடியவில்லையாம். அதையடுத்து படிப்பிடிப்பை நிறுத்திய அப்பட டைரக்டர் குணசேகரன், அனுஷ்காவை சிகிச்சைக்காக அனுப்பியுள்ளாராம். அதனால் தற்காலிகமாக பட்ப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அனுஷ்காவுக்கு புத்தூர் கட்டு போடப்பட்டுள்ளதாம். எதிர்பாராதவிதமாக நடந்த இந்த தசை பிடிப்பு காரணமாக, அனுஷ்கா அடுத்தடுத்து நடிக்கயிருக்கும் படங்களின் படப்பிடிப்புகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.