பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பார்த்திபன் இயக்கி வரும் புதிய படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. இந்த படத்தின் ஆடியோ விழா சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. அதையடுத்து மாலை 4 மணி அளவில் லீ மெரிடியன் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் பார்த்திபன். இதில், படத்தில் நடித்துள்ள தம்பிராமைய்யா, சந்தோஷ், அகிலா, விஜய்ராம், தினேஷ், லல்லு, சாஹித்யா, படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ள சத்யா, கேமராமேன் ராஜரத்னம், எடிட்டர் சுதர்ன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பார்த்திபன் பேசுகையில், இப்படத்தின் தலைப்பில் மட்டுமே கதை உள்ளது. ஆனால், படத்தில் கதை இல்லை. அதேசமயம் சுவராஸ்யமான காட்சிகளின் தொகுப்பாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். மேலும் முதல் பாதியில் படம் எதை நோக்கி செல்கிறது என்பதை ரசிகர்களால் யூகிக்க முடியாது. ஆனால், இரண்டாவது பாதி படு சுவராஸ்யமாக இருக்கும். அந்த வகையில் வாழ்க்கையின் உண்மையான சுவராஸ்யங்களை இப்படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறேன். முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே படத்தை தொடங்கினாலும் இப்போது கதைக்கு தேவையான சில பிரபல நட்சத்திரங்களும் படத்தில் நடித்து பெருமை சேர்த்திருக்கிறார்கள். விஷால், ஆர்யா, அமலாபால், விஜயசேதுபதி, டாப்சி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடித்திருக்கிறார்கள்.
அதோடு, முதலில் பாடலே இல்லாமல் படமாக்க நினைத்தேன். பின்னர் பாடலும் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் நான்கு பாடல்களை படத்தில் இணைத்திருக்கிறேன். ஆனால் நான்கு பாடல்களுக்கும் விஜய் ஆண்டனி, அல்போன்ஸ் ஜோசப், ஷரத், எஸ்.எஸ்.தமன் என தலா ஒரு பாடல் என்று நான்கு இசையமைப்பாளர்களை வைத்து இசையமைத்திருக்கிறேன். மேலும், எங்கேயும் எப்போதும் சத்யா பின்னணி இசையமைத்திருக்கிறார். ஆக, இவர்கள் ஒவ்வொருவருமே தங்களது பெஸ்ட்டை இந்த படத்துக்கு கொடுத்திருக்கிறார்கள் என்றார்.
அவரிடத்தில், சமீபகால படங்களில கதையை தேட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதை சுட்டிக்காட்டத்தான் நீங்கள் கதையே இல்லாமல் படம் இயக்க முடிவு செய்தீர்களா? என்று கேள்வி எழுந்தபோது,
நான் எப்போதுமே பத்து வருடத்துக்கு பிறகு சொல்ல வேண்டியதை முன்பே சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுபவன். அப்படித்தான் குடைக்குள் மழை உள்ளிட்ட பல படங்களுக்கு கதை உருவாக்கினேன். அந்த வகையில, இப்போதைய ஆடியன்ஸ் இன்டலிஜன்டாகவும், இன்ட்ரஸ்டிங்காகவும் இருப்பதால் அதை மனதில் கொண்டு இந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை இயக்கியிருக்கிறேன். மேலும், மற்றவர்களை கிண்டல் செய்து படமெடுக்கிற பழக்கம் எப்போதுமே எனக்கு இருந்ததில்லை என்று சொன்ன ராதாகிருஷ்ணன் பார்த்திபன், அடுத்த மாதம் படம் திரைக்கு வருவதாகவும் தெரிவித்தார்.