ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
அண்ணாமலை, பாட்சா உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா. தற்போது தொலைக்காட்சி தொடர்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். மகாபாரதம், உணர்வுகள் தொடரை இயக்கியவர் தற்போது அரங்கேற்றம் என்ற தொடரை தயாரித்து, இயக்குகிறார். "சினிமாவை இயக்குவதை விட சீரியல் இயக்குவதுதான் சிரமாக இருக்கிறது" என்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: 2 மணி நேர சினிமாவை திட்டமிட்டு எடுத்து விடலாம். ஆனால் சீரியல் எளிதானதல்ல, ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒரு சினிமா மாதிரி உழைக்க வேண்டியது இருக்கிறது. அடுத்த எபிசோடில் என்ன என்ற ஆவலையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்கேற்ப திரைக்கதை அமைக்க வேண்டியது இருக்கிறது. திரைக்கதையின் வேகம் சரியாக இல்லாவிட்டால் மக்கள் டி.வி.முன் உட்கார மாட்டார்கள். எனவே சினிமாவை விட சீரியல்தான் கஷ்டம். ஆனாலும் இரண்டும் ஒன்றாகிவிட முடியாது. அதன் அளவுகோல் வேறு, இதன் அளவுகோல் வேறு.
சீரியல் இயக்குவதால் சினிமாவை கைவிட்டு விடவில்லை. அதிலும் கவனம் செலுத்தி வருகிறேன். விரைவில் தெலுங்கு படம் ஒன்றை இயக்கப்போகிறேன். அதன் பிறகு தமிழ் படம் இயக்குவேன். இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது என்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.