தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
கடந்த மாதம் 24ந் தேதி இந்திய எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் மேஜர் முகுந்தன் வரதாராஜன். அவருக்கு 42 குண்டுகள் முழுங்க ராணுவ மரியதையுடன் இறுதி மரியாதை செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் முகுந்தின் மகள் அர்ஷியாவின் வெள்ளிந்திரியான குழந்தை மனதும், அப்பா இறந்தது தெரியாமல் அவர் வந்திருந்தவர்களை வரவேற்றதும், டாட்டா காட்டி வழியனுப்பி வைத்ததும் எல்லோரையும் நெகிழ வைத்தது. இதனை தொலைக்காட்சியில் பார்த்த நடிகர் விஜய்யும் நெகிழ்ந்து போனார். அந்தக் குழந்தையை சந்திக்க விரும்பினார்.
கத்தி படத்தின் முதல்கட்ட பணிகளை முடித்து திரும்பியிருக்கும் விஜய் வந்த உடன் நேராக முகுந்தின் வீட்டிற்கு சர்ப்பரைசாக சென்றார். அவரது மனைவி, தந்தைக்கு ஆறுதல் கூறிவிட்டு அர்ஷியாவை மடியில் தூக்கி வைத்து கொஞ்சினார். அப்பா இன்னும் உயிருடன் இருப்பதாக கருதும் அர்ஷியா தன் அப்பா எல்லையில் நாட்டை பாதுகாத்து கொண்டிருப்பதாகவும் விரைவில் வருவார் என்றும் கொஞ்சும் ஆங்கிலத்தில் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்து போனர். அர்ஷியாவுடன் நீண்ட நேரம் இருந்து விட்டு அவரை பிரிய மனம் இல்லாமல் கனத்த இதயத்துடன் திரும்பினார் விஜய்.