ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
2012ம் ஆண்டு இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வன்யா மிஷ்ரா. பட்டத்தை வாங்கிய கையோடு தமிழ் சினிமாவுக்கு வந்தார். அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட படம் டிராப் ஆனதால் மனம் வெறுத்துப்போய் சினிமாவே வேண்டாம் என்று சொந்த ஊரான சண்டிகருக்கு திரும்பி விட்டார். அங்கு எலெக்ட்ரிகல் என்ஜினீயரிங் படித்தார். படிப்பு முடிந்து விட்ட நிலையில், இப்போது ஷிர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு திரும்புகிறார் கல்யாண்ராம் ஹீரோ. மல்லிகார்ஜுன் இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
"தமிழ் படம் மூலம்தான் என் சினிமா கேரியரை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தேன் அது நடக்காமல் போய்விட்டது. தெலுங்கு படம் மூலமாகத்தான் வரவேண்டும் என்று விதி இருந்திருக்கிறது போலும். இந்தப் படத்துக்கு நிறைய பேர் ஆடிசன் செய்யப்பட்டார்கள். இறுதியில் நான்தான் செலக்ட் ஆனேன். விரைவில் தமிழ் படத்திலும் நடிப்பேன்" என்கிறர் வன்யா மிஷ்ரா.